25 செப்டம்பர், 2012



மனமெல்லாம் பூவைக்
கொட்டி விட்டு , எட்டி நின்று
அழகு பார்த்தவன்

சொல்லி அழுத துக்கத்தையும்,
சொல்ல முடியாத சோகத்தையும்
சொடுக்கும் நேரத்தில்
கிள்ளி எரிந்து, வேடிக்கை
பார்த்து ரசித்தவன்

இரவு, பகல்
மழை, வெயில்
காலம், நேரம்
ஏதும் தெரியாமல்
எனக்காகக் காத்துக்
கிடப்பவன்

எத்தனையோ நாள் என்னிடம்
கண்ணாம்பூச்சி ஆடியவன்

சமூகம் சொல்லும்
எந்த உறவுமில்லை அவன் எனக்கு.


அவன் நினைவில்....  ஒரு
புல்லைக் கண்டால் அது
கனமாக இருக்கிறது....

என் எதிரி கூட
என் சிறு பிள்ளை போலத்  தெரிகிறார்

அவன் நினைவில் இருந்தால்
சொல்லத் தெரியாத,  வடிக்க முடியாத
அளவு எப்படியோ எனக்குள் அற்புதம்
செய்து வைத்து மறைந்து போகிறான்