24 ஏப்ரல், 2013

உன் நினைவில்


கவிதையை அறிமுகம் செய்தவன்
நீ தான்.....

சிறு தூசியைக் கூட
கோவில் சிலையாகப்
பார்க்க வைத்தவன் நீ......

அழுவதைச் சொல்லித்
தந்தவனும் நீதான்......

கல்லின் மேலும் எனக்கு
காதல் வரக் காரணமானவன் நீ....

கடவுள் போலவே
கண்டதையும்
ஆராதிக்கச் சொல்லித் தந்தவன் நீ.....

அழுது பழகாத கண்ணிலிருந்து
அருவி போல
கண்ணீர் வந்ததும் உன்னாலே......

ஊர் தூங்கும் வரைக்கும்
காத்திருந்து...
விடிய விடிய விம்மி விம்மி
அழுதது உனக்காக மட்டுமே......

ஊரெல்லாம் ஓடிவந்து
சொன்னது என்னிடம்
உன்னை நினைக்க வேண்டாமென்று.....
மறுத்துவிட்டேன் அது முடியாதென்று....
விட்டு விட்டார்கள் இது திருந்தாது என்று.....


என் காதல் கடவுளே !!!
என் உயிருக்குள் உருண்டோடிய
உன் உணர்வை நானே நினைத்தாலும்
நகர்த்தி வைக்க முடியாது......















1 கருத்து:

Unknown சொன்னது…

அழுது பழகாத கண்ணிலிருந்து
அருவி போல
கண்ணீர் வந்ததும் உன்னாலே......
ஊர் தூங்கும் வரைக்கும்
காத்திருந்து...
விடிய விடிய விம்மிவிம்மி
அழுதது உனக்காக மட்டுமே.....

வரிகளுக்கும் வலிகள் உண்டு....