13 மே, 2013

தினம் கடக்கும்
பல முகங்கள்....
தொடர் வண்டிபோல 
இரைச்சலோடு 
வருகின்ற 
என் எண்ணங்கள்....
கண்ணுக்குத் தெரியாத 
பலகோடி நினைவுகள்...

இப்படித்
தினங்கள் கடக்கும் ஒரு நேரத்தில் 
நீயும் வந்து போனாய்....

நீ வந்து போகும் போது 
மட்டும் தான் 
என்னை அழகாக உணர்கிறேன்....

உனக்கும் எனக்கும் உண்டான 
உறவைச் சொல்ல 
வார்த்தைக்குத் தெரியுமா 
என்று தெரியவில்லை!!!

என் எல்லாக் கவிதைக்கும் தெரியும் 
உன்னை!

நான் பார்த்து ரசிக்கும்
புல்லுக்கும், கல்லுக்கும்
தெரியும் உன்னை!

முதன் முதலாக சாவை கூட
சந்தோசமாகப் பார்க்க வைத்தவன் நீ!

இதற்கு மேலும்
நான் உன்னை என்ன
சொல்ல வேண்டும் என்று
புரியவில்லை, அதற்குச் சரியான
வார்த்தையும் கிடைக்கவில்லை!








கருத்துகள் இல்லை: