1 மே, 2013

பிரம்மாண்ட உலகம்,
ஆசை கொள்ள வைக்கும்
அற்புத மக்கள்,
பிரியம் மிக வைத்திருக்கும்
எவை எவையோ ...

ஆனால்....
ஏனோ உன்னை மட்டுமே
உணர்வு மிகக் கொண்டு
தேடுகிறது மனது....

மிகக் கவனமாகவே
உன்னை என்னுள்
அனுமதிக்கும் போதே
என் சுயமென்று நினைத்திருப்பதை
அனைத்தையும் நிதானமாகத்
தகர்த்தெரிகிறாய்..... நீ !!

தகர்த்தெறிந்த மறு நிமிடமே
எப்படி எப்படியோ
உருத் தெரியாத
உள்ளங் கொள்கிறேன் நான்

அங்கே உனக்கென்றும், எனக்கென்றும்,
தாய்க்கென்றும், பேயக்கென்றும்
பணத்திற்கும், பகட்டிற்கும்
எதற்கும், எவருக்கும்
தனியொரு இடமில்லை

அடையாளங்கள் தொலைந்து போகும்
அற்புத நிமிடங்கள் அவை

குழந்தையாக என்னை நானே
பிரசவிக்கும் இனிய நிமிடங்கள்

அழுகையை அடக்க முடியாத
அற்புத அனுபவம்....

சாவு கூட சங்கமாய் தோன்றுவதில்லை
சோறு இல்லாவிடினும்
பிரச்சினையாகஇருப்பதில்லை,
நான் மிகவும் வித்யாசமாக இருப்பேன்
நீ என்னுள் இருக்கும் போதெல்லாம்

இருப்பினும்
உந்தன் பிரம்மாண்டம்
எனக்கு விளங்கவில்லை











1 கருத்து:

Unknown சொன்னது…

அழுகையை அடக்க முடியாத
அற்புத அனுபவம்.... உண்மைதான்.