17 மே, 2013


எங்கு நோக்கினும்
என்னுள்ளே ஒரு
பெரும் வறட்சி....
நம் விவசாயம் போலவே....

நோக்காத இடமில்லை
இருப்பினும்
எதற்கோ எங்கோ
ஒரு பெரும் பஞ்சம்
உள்ளே....

மழை கண்ட
மண்ணாய், வளமாய்
மணந்தது  ஏனோ இன்று
சுட்டெரிக்கும்
சூரியனோடு.....சம்பந்தமே இல்லாமல்.....


காலடித் தடம்
பட்டே இறுகி இறுகி
இறுதியில் என்
ஆசை மழை
இல்லாமலேயே
மலடாகிப்
போனதுவே!!

மண்னேதான்
என் அழகான
மனமே நீ! ....
தவமிருக்கத் தெரியாது பாவம்
ஆயினும்,
மழை கண்டால்
மண்ணைத் தள்ளி
மூச்சு விடத் துடிக்கும்
அற்புத விந்தை நீ!....

யாரேனும் ஆசையாக
ஓடிவந்து
முட்டி வெளிவந்த புதிய
உயிருக்கு  நீர் வார்க்கத்
தொடர்ந்தால்
முடிவில் வாள் கொண்டு
வெட்டினாலும்
முனகல் மட்டும் வாராது....
உன்னிலிருந்து....



கருத்துகள் இல்லை: