11 அக்டோபர், 2013

ஒவ்வொரு வார்த்தைக்குப் 
பின்னால் கிடக்கும் சிறிய 
இடைவெளியின் மௌனத்தில் 
இளைப்பாறுகிறேன் 

யாதொரு குறுக்கீடும், 
யாதொரு சுமையும் 
இல்லாத இயல்பையும் 
மீறிய மௌனம்.

கவனித்ததில்
அந்த மௌனங்கள் 
வார்த்தைகளை 
பூப்போல மென்மையாக்கி விட்டிருந்தது 

உச்சரிக்கவே முடியாத அளவு 
சிறு பிள்ளையின் ஸ்பரிசமாய்,
வார்த்தைகள் என்னுள்ளே


    

கருத்துகள் இல்லை: