15 நவம்பர், 2013

மௌனங்கள் விரிந்த
பரந்த வெளியினூடே

உணர்வுகள் மட்டுமே
உணவாய்ப் போன நாட்களின்
இனிமையினூடே

உதிர்க்கும் சொல்லெல்லாம்
யாரோ ஒருவரின்
மனதுக்குள் விதையாய்ப்
போகுமென்பதை அறியாததினூடே

அறியாததின் தாகம்
உணர்ந்த பின்னே  
அது கடவுளுணர்வே,
காதலுணர்வே ஆயினும்
சாதரணமாய்த்  தூக்கி வீசி விட்டு
புதியதைத் தேடும்
புதிரான மனதினூடே

மழலை முடிந்து......
இளமை முடிந்து ......
முதுமை முடிந்து கொண்டிருக்கிறது
சலனங்களில்லாமல்.....


கருத்துகள் இல்லை: