17 நவம்பர், 2013

வார்த்தைகள் தொலைந்து,
உணர்வுகள்  ஊறிய ,
மௌனங்கள் நிரம்பிய
நாழிகைகள் ....

வழிந்தோடிய மனதின்
பேச்சுக்களை எல்லாம்
துடைத்து விட்டுப்
புதுக்கோலம் போட்ட
முதல் நிமிடம்....


வசந்தம் வருகிறதென்று
அவசரமாக
அறிவித்து நிற்குமென்
முகப் பொழிவும்,
முற்றத்தில் முகிழ்த்துச் சிரிக்கும்
முல்லைச் செடியும்.....