28 ஏப்ரல், 2014

கண் முன்னே வெள்ளைப்  பற்களைக்
காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும்
இந்தக் கனத்த சுவருக்குள்ளே
கட்டி முடிந்து வைத்திருக்கிறேன்
என் அத்தனை கனவுகளையும்;

படுத்துக் கிடக்கும்
பாதை நெடுகிலும்,
காத்துக் கிடக்கும்
நெடுமரம் யாவிலும்,
சுவாசத்தைச்
சுண்டி இழுக்கும்
அத்தனை பூவிற்குள்ளும்,
உரசிப் போகும் போதே
என் மனதை உடைத்துப்
போடும் காற்றின் வருடளுக்குள்ளும்
அழியாமல் ஒழிந்து
கொண்டிருக்கின்றது  என்
ஆசைகளின் சுவடுகள் அத்தனையும்.

1 கருத்து:

logu.. சொன்னது…

ம்ம்.. நிஜம்தான்.. அத்தனையும்..!