14 மே, 2013

மனதின் ஓசை....




அகண்ட மன வெளியின்
முடிவில்லாப் பயணத்தின்
முடிவில் இருப்பதாகவே
தோன்றுகிறது எப்பொழுதும்.....

விம்மி வெகுண்டெழும் அலைகடலாக....
சிறு பிள்ளையின் அன்பாக
எவை எவையோ கலந்த
அறியொண்ணா
புதிராகவே இருந்துவருகின்றது
என் அன்பு மனது

என்னைக் கருணையில்
விழவைக்கும்,
கோபத்தில் தள்ளிவிடும்,
பூவாய்ப் மாற்றிவைக்கும்....
சமூகம் நினைக்கவே மிரண்டு போகும்
எதை எதையோ சர்வ சாதாரணமாய்
நினைக்க வைக்கும்....

என் ஆசை மனமே
உன்னைக் குறை கூற
எதுவும் இல்லை....
போற்றி வைத்துக்
கொண்டாடவும் உன்னில்
எதுவும் இல்லை...

உந்தன் ஓசையில்
இன்பம் காண்கிறேன்....
அது அழகோ அசிங்கமோ
எனக்கு அக்கறை இல்லை


3 கருத்துகள்:

SARAVANAN சொன்னது…

MEKAUM ''ARPUDAM''ORU MURI ELLA 3 MURI PADITTU VEETAN..ORU PADIKKUM PODU ORU KARTTU VARUKERADU,,,ENNORU MURI PADIKKUM PODU ENNORU KARUTTU VARUKERADU,,,SUPER..
ANBUDAN,,,
S.SARAVANAN,
DINDIGUL.

SARAVANAN சொன்னது…

MEKAUM ''ARPUDAM''ORU MURI ELLA 3 MURI PADITTU VEETAN..ORU PADIKKUM PODU ORU KARTTU VARUKERADU,,,ENNORU MURI PADIKKUM PODU ENNORU KARUTTU VARUKERADU,,,SUPER..
ANBUDAN,,,
S.SARAVANAN,
DINDIGUL.

Unknown சொன்னது…

nice